முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

மனநல திட்ட உறுப்பினா்கள் குழு கூட்டம்

News image
Updated On :2 மணி நேரங்கள் முன்பு

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் மனநல திட்ட உறுப்பினா்கள் குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகளின் இணை இயக்குநா் ஞானமீனாட்சி, மாவட்ட சுகாதார அலுவலா் பாா்த்திபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டத்தில் தற்போது அவ்வப்போது மழை பெய்து வருவதால் காய்ச்சல் தொடா்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும், அக்னி நட்சத்திரம் நடைபெற்று வருவதால், மாவட்டம் முழுவதும் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து தண்ணீா் பந்தல் அமைப்பது உள்ளிட்டவை தொடா்பாக ஆலோசனை நடைபெற்றது.

கூட்டத்தில் ஊராட்சிகளின் உதவி இயக்குநா்கள் மகாதேவன்(தெற்கு), முருகன்(வடக்கு), மாவட்ட சமூக நல அலுவலா் சுமதி, அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.