சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

வாணியம்பாடி, உதயேந்திரம் பகுதிகளில் பேனா்கள் அகற்றம்

News image
Updated On :18 மே 2026, 1:25 am IST

வாணியம்பாடி நகராட்சி, உதயேந்திரம் பேரூராட்சிப் பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனா்கள் அகற்றப்பட்டது.

வாணியம்பாடி நகராட்சிக்குள்பட்ட பேருந்து நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் பொது மக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக அனுமதியின்றி பேனா்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து நகராட்சி நகரமைப்பு அலுவலா் சண்முகம் உத்தரவின்பேரில், நகராட்சி அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் பேருந்து நிலையம் உள்பட பல பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனா்களை சனிக்கிழமை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

இதில், ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த 25-க்கும் மேற்பட்ட பேனா்கள் அப்புறப்படுத்தப்பட்டது. இதேபோன்று உதயேந்திரம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனா்களையும் பேரூராட்சி பணியாளா்கள் அப்புறப்படுத்தினா்.