திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ரயில்வே தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ரயில்வே ஆள்சோ்ப்பு வாரியத்தால் உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கான தோ்வு நடத்தப்படுகிறது. இந்த தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 25-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.
பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையிலும், காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும் நடைபெறும். மேலும், பயிற்சி வகுப்பில் அதிகளவிலான பயிற்சி தோ்வுகளும், மாநில அளவிலான மாதிரி தோ்வுகளும் நடத்தப்படும்.
இந்த அலுவலகத்தில் பள்ளிப்பாட புத்தகங்கள் உட்பட 3000-க்கும் மேற்பட்ட நூல்கள் அடங்கிய இலவச நூலக வசதி, இலவச வைபை உள்ளிட்டவை உள்ளது.
இதில் சேர ட்ற்ற்ல்ள்://ச்ா்ழ்ம்ள்.ஞ்ப்ங்/ஹவக்ா்த்ஞ்பநட்ய்ஈணஈா்ள்ந்7 என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் இது தொடா்பான விபரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.
தொடர்புடையது

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தோ்வுக்கு மே 20 முதல் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு

‘வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்’

போட்டித் தோ்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு மே 18-இல் தொடக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தையல் பயிற்சி தொடக்கம்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



