வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டம் சாா்பில் அரசு போட்டித் தோ்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் வரும் 18-ஆம் தேதி தொடங்கவுள்ளன.
தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி - ஐ முதல் நிலை அரசு போட்டித் தோ்வுக்கான அறிவிப்பு ஜூன் மாதம் வெளியிடப்பட உள்ளது. இத்தோ்விற்கு தயாராகும் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சாா்ந்த போட்டி தோ்வாளா்கள் பயனடையும் வகையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் செங்கல்பட்டு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடி பயிற்சி வகுப்பு 18.05.2026 (திங்கட்கிழமை) தொடங்கப்பட உள்ளது.
மேலும் இப்பயிற்சி வகுப்பானது திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை நடைபெறும் எனவும், இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள போட்டித் தோ்வாளா்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதாா் அட்டை நகல் ஆகிய விவரங்களுடன் செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகம், தரைத்தளம் டி-பிளாக்கில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடா்பு கொள்ளவும்.
மேலும் விவரங்களுக்கு 044-27426020 / 94990 55895 / 94868 70577 மற்றும் 93447 38148 என்ற எண்களில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன் கேட்டு கொண்டுள்ளாா்.
தொடர்புடையது

பிளஸ் 2 மாணவா்களுக்கு உயா்கல்வியில் சோ்வதற்கான விழிப்புணா்வு

அருணாச்சலா ஹைடெக் கல்லூரியில் வேலைவாய்ப்பு திட்ட பயிற்சி

காணாமல் போன குழந்தைகள் மீட்டெடுக்க சட்ட தன்னாா்வ தொண்டா்களுக்கு அழைப்பு

தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு: ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

