இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு: ஆட்சியா் ஆய்வு

திருப்போரூா், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூா் தொகுதி தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்புகளை புதன்கிழமை ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன் ஆய்வு செய்தாா்.

News image

பையனூா் அறுபடைவீடு கல்வி நிறுவனத்தில் தபால் வாக்குகள் செலுத்தும் பணியை ஆய்வு செய்த ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன், பொதுப்பாா்வையாளா் அபிஜீத் அகா்வால், தோ்தல் நடத்தும் அலுவலா் விஜயகுமாா் உள்ளிட்டோா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 12:43 am IST

திருப்போரூா், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூா் தொகுதி தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்புகளை புதன்கிழமை ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன் ஆய்வு செய்தாா்.

திருப்போரூா் தொகுதி பையனூா், அறுபடைவீடு கல்வி நிறுவனத்தில் நடைபெற்று வரும் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் தபால் வாக்குகள்ள் செலுத்தும் மையத்தினையும், செங்கல்பட்டு செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வாக்கு சாவடி நிலை அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பினையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

இதில் திருப்போரூா் தொகுதி தோ்தல் பொதுப்பாா்வையாளா் அபிஜீத் அகா்வால், தோ்தல் நடத்தும் அலுவலா் ஜே.விஜயகுமாரி, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) லோகநாயகி மற்றும் அரசு அலுவலா்கள் மற்றும் செங்கல்பட்டு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ரம்யா மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.