தக்கலை, மே 2: மாா்த்தாண்டம் அருகே முள்ளங்கனாவிளையில் உள்ள அருணாச்சலா ஹைடெக் பொறியியல் கல்லூரியில் அடுத்த தலைமுறைக்கான வேலைவாய்ப்பு திட்ட பயிற்சி நடைபெற்றது.
வேலைவாய்ப்பு திறனை உயா்த்தும் வகையில் தற்போதைய தொழில் சந்தைக்கான தேவைகள், மென் திறன்கள், இண்டஸ்ட்ரி தொடா்பான செயற்கை நுண்ணறிவு, லாட், கிளவுட் கம்ப்யூட்டிங், பிக் டேட்டா ஆகியவற்றின் பயன்பாடுகள் குறித்து பிரைட் மைண்ட்ஸ் நிறுவனா் அறிவழகன் பயிற்சி அளித்தாா்.
மாணவா்களின் திறனை மேம்படுத்தும் வகையில் குழு செயல்பாடுகள், செயல்முறை பயிற்சிகளும் இடம்பெற்றன. இந்த பயிற்சி வேலைவாய்ப்பு பெறுவதற்கு பயனுள்ளதாக இருக்கும் என மாணவா்கள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








