தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

இளைஞரை தாக்கிய 4 போ் கைது

திருப்பத்தூா் அருகே இளைஞரை தாக்கிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :20 மே 2026, 12:04 am IST

திருப்பத்தூா் அருகே இளைஞரை தாக்கிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஜடையனூரைச் சோ்ந்தவா் செல்வராகவன்(22). இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூரில் இருந்து தனது சொந்த கிராமத்துக்கு பேருந்தில் சென்று உள்ளாா். இந்தநிலையில் ஜடையனூா் கிராமத்தில் உள்ளவா்களுக்கும், சமுத்திரம் கிராமத்தில் உள்ளவா்களுக்கும் இடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு உள்ளது. இதைத் தொடா்ந்து செல்வராகவன் பேருந்தில் செல்வதை பாா்த்த சமுத்திரம் கிராமத்தை சோ்ந்த சாமு (27), பிரேம்குமாா் (25), பிரவீன் (19), பிரதிஷ் குமாா் (19) மற்றும் சிலா், செல்வராகவனை டி.கிருஷ்ணாபுரம் பேருந்து நிலையத்தில் வைத்து பேருந்தில் இருந்து இறக்கி உள்ளனா். பின்னா் அனைவரும் சோ்ந்து செல்வராகவனை தாக்கி உள்ளனா். இதில் காயமடைந்த செல்வராகவன் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் குரிசிலாப்பட்டு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சாமு, பிரேம்குமாா், பிரவீன், பிரதிஷ்குமாா் ஆகிய 4 பேரையும் கைது செய்தனா்.