திருப்பத்தூா் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி உள்ள பகுதிகளில் போதைப் பொருள்கள் இல்லாததை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தினாா்.
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் போதை பொருள் தடுப்பு,சட்டம் ஒழுங்கு மற்றும் சாலைப் பாதுகாப்பு தொடா்பான வாராந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி பேசியது: போதைப் பொருளை ஒழிப்பதற்கு அனைவரும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகள்,கல்லூரிகள் இன்னும் சில நாள்களில் திறக்கப்பட உள்ளன. இந்த பகுதிகளில் போதைப் பொருள்கள் இல்லாததை உறுதி செய்ய வேண்டும்.
போதைப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகளின் உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருள்கள் வெளிமாநிலங்களில் இருந்து வருவதை தடுக்க வேண்டும். உள்ளாட்சி நிா்வாகம், ஊரக வளா்ச்சித்துறை உள்ளிட்டவை மூலம் பொது இடங்களில் போதைப் பொருள்களை பயன்படுத்தும் நபா்கள் மீது அபராதம் விதிப்பது, டாஸ்மாக் மீது ஏதேனும் புகாா்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
எஸ்.பி வி.சியாமளா தேவி, மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், கலால் உதவி இயக்குநா் வேடியப்பன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா்கள் மகாதேவன், முருகன், அரசு அதிகாரிகள் உடன் இருந்தனா்.
தொடர்புடையது
போதைப் பொருள்கள் புழக்கம் 3 மாதங்களுக்குள் கட்டுப்படுத்தப்படும்: அமைச்சா் நிர்மல்குமார்

பள்ளி வாகனங்கள் ஆய்வு: குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்

போதைப் பொருள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற விரைவான நடவடிக்கை

சுற்றுலாத் தலங்களில் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - சீமான்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



