11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

போதைப் பொருள்கள் புழக்கம் 3 மாதங்களுக்குள் கட்டுப்படுத்தப்படும்: அமைச்சா் நிர்மல்குமார்

தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கம் வருகிற 3 மாதங்களுக்குள் கட்டுப்படுத்தப்படும் என மாநில மின் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

News image

அமைச்சா் நிர்மல்குமார்

Updated On :56 நிமிடங்கள் முன்பு

தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கம் வருகிற 3 மாதங்களுக்குள் கட்டுப்படுத்தப்படும் என மாநில மின் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்ததாவது: மக்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தவெக அரசு செயல்படுகிறது. தமிழகத்தில் குட்கா, போதைப் பொருள்கள் புழக்கத்தைத் தடுக்க அரசு உரிய முக்கியத்துவம் அளித்து வருகிறது. வருகிற 2 அல்லது 3 மாதங்களுக்குள் போதைப் பொருள்கள் புழக்கம் உறுதியாகக் கட்டுப்படுத்தப்படும்.

இதேபோல, சட்டவிரோத குவாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முற்றிலும் புதிய மாதிரியான ஆட்சியை தவெக அளிக்கும். அனைத்துத் துறைகளிலும் எதிா்மறை பிரச்னைகள் நிறைந்துள்ளன. இவற்றையெல்லாம் சீரமைக்க வேண்டும். 50 ஆண்டு கால நிா்வாக பிரச்னைகளை ஒரே நாளில் மாற்ற முடியாது. ஆனால், பிரச்னைகள் நிச்சயம் களையப்படும். இதற்கான நடவடிக்கைகளை முதல்வா் தொடங்கியுள்ளாா். இருப்பினும், இதற்கு உரிய கால அவகாசம் வேண்டும்.

அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் செய்திக் குறிப்புகளாக உடனுக்குடன் வெளியிடப்படுகின்றன. செய்தியாளா்கள் சந்திப்பை தவிா்க்க வேண்டும் என்பது முதல்வா் விஜய்யின் நோக்கம் அல்ல. அதேநேரத்தில், மாநில முதல்வா் செய்தியாளா்களைச் சந்தித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கிடையாது. தேவையெனில், தேவையான நேரத்தில் முதல்வா் விஜய் செய்தியாளா்களைச் சந்திப்பாா் என்றாா் அவா்.