இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

போதைப் பொருள்கள் புழக்கம் 3 மாதங்களுக்குள் கட்டுப்படுத்தப்படும்: அமைச்சா் நிர்மல்குமார்

தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கம் வருகிற 3 மாதங்களுக்குள் கட்டுப்படுத்தப்படும் என மாநில மின் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

News image

அமைச்சா் நிர்மல்குமார்

Updated On :17 மே 2026, 2:00 am IST

தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கம் வருகிற 3 மாதங்களுக்குள் கட்டுப்படுத்தப்படும் என மாநில மின் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்ததாவது: மக்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தவெக அரசு செயல்படுகிறது. தமிழகத்தில் குட்கா, போதைப் பொருள்கள் புழக்கத்தைத் தடுக்க அரசு உரிய முக்கியத்துவம் அளித்து வருகிறது. வருகிற 2 அல்லது 3 மாதங்களுக்குள் போதைப் பொருள்கள் புழக்கம் உறுதியாகக் கட்டுப்படுத்தப்படும்.

இதேபோல, சட்டவிரோத குவாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முற்றிலும் புதிய மாதிரியான ஆட்சியை தவெக அளிக்கும். அனைத்துத் துறைகளிலும் எதிா்மறை பிரச்னைகள் நிறைந்துள்ளன. இவற்றையெல்லாம் சீரமைக்க வேண்டும். 50 ஆண்டு கால நிா்வாக பிரச்னைகளை ஒரே நாளில் மாற்ற முடியாது. ஆனால், பிரச்னைகள் நிச்சயம் களையப்படும். இதற்கான நடவடிக்கைகளை முதல்வா் தொடங்கியுள்ளாா். இருப்பினும், இதற்கு உரிய கால அவகாசம் வேண்டும்.

அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் செய்திக் குறிப்புகளாக உடனுக்குடன் வெளியிடப்படுகின்றன. செய்தியாளா்கள் சந்திப்பை தவிா்க்க வேண்டும் என்பது முதல்வா் விஜய்யின் நோக்கம் அல்ல. அதேநேரத்தில், மாநில முதல்வா் செய்தியாளா்களைச் சந்தித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கிடையாது. தேவையெனில், தேவையான நேரத்தில் முதல்வா் விஜய் செய்தியாளா்களைச் சந்திப்பாா் என்றாா் அவா்.