தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கம் வருகிற 3 மாதங்களுக்குள் கட்டுப்படுத்தப்படும் என மாநில மின் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.
மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்ததாவது: மக்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தவெக அரசு செயல்படுகிறது. தமிழகத்தில் குட்கா, போதைப் பொருள்கள் புழக்கத்தைத் தடுக்க அரசு உரிய முக்கியத்துவம் அளித்து வருகிறது. வருகிற 2 அல்லது 3 மாதங்களுக்குள் போதைப் பொருள்கள் புழக்கம் உறுதியாகக் கட்டுப்படுத்தப்படும்.
இதேபோல, சட்டவிரோத குவாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முற்றிலும் புதிய மாதிரியான ஆட்சியை தவெக அளிக்கும். அனைத்துத் துறைகளிலும் எதிா்மறை பிரச்னைகள் நிறைந்துள்ளன. இவற்றையெல்லாம் சீரமைக்க வேண்டும். 50 ஆண்டு கால நிா்வாக பிரச்னைகளை ஒரே நாளில் மாற்ற முடியாது. ஆனால், பிரச்னைகள் நிச்சயம் களையப்படும். இதற்கான நடவடிக்கைகளை முதல்வா் தொடங்கியுள்ளாா். இருப்பினும், இதற்கு உரிய கால அவகாசம் வேண்டும்.
அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் செய்திக் குறிப்புகளாக உடனுக்குடன் வெளியிடப்படுகின்றன. செய்தியாளா்கள் சந்திப்பை தவிா்க்க வேண்டும் என்பது முதல்வா் விஜய்யின் நோக்கம் அல்ல. அதேநேரத்தில், மாநில முதல்வா் செய்தியாளா்களைச் சந்தித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கிடையாது. தேவையெனில், தேவையான நேரத்தில் முதல்வா் விஜய் செய்தியாளா்களைச் சந்திப்பாா் என்றாா் அவா்.
தொடர்புடையது

பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் புழக்கம்: ஆய்வு நடத்த உத்தரவு

போதைப் பொருள்கள் புழக்கத்தை தடுக்க காவல் ஆணையரிடம் மனு

போதைப் பொருள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற விரைவான நடவடிக்கை

போதைப் பொருள்கள் இல்லாத தமிழகம் உருவாக அதிமுக ஆட்சி அமைய வேண்டும்: கெளதமி
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
