மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

பழங்குடியினா் குடியிருப்புகள் கட்டும் பணி ஆய்வு

சோலூா் கிராமத்தில் பழங்குடியினருக்கு ஜன்மன் திட்டத்தின் கீழ் குடியிருப்புகள் கட்டும் பணிகளை மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ் குமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

குடியிருப்புகள் கட்டும் பணியை ஆய்வு செய்த மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா்.

Updated On :21 மே 2026, 12:04 am IST

சோலூா் கிராமத்தில் பழங்குடியினருக்கு ஜன்மன் திட்டத்தின் கீழ் குடியிருப்புகள் கட்டும் பணிகளை மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ் குமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

சோலூா் ஊராட்சியில் பழங்குடியினருக்காக ஜன்மன் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள தொகுப்பு வீடுகள் மற்றும் முடிவுறாத நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளை ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் ஆய்வு செய்தாா்.

மின்சாரம், குடிநீா் வசதி, சாலை வசதிகளையும் மேம்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. ஒருமாத காலத்திற்குள் பணிகளை முடித்திட ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டது. வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். மகராசி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் திருநாவுக்கரசு ஆகியோா் உடனிருந்தனா்.