கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

இரு சக்கர வாகன பெட்டியில் வைக்கப்பட்ட ரூ. 1 லட்சம் திருட்டு

வேலூா் அருகே பைக் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பணம் ரூ.1 லட்சம் திருடு போனது.

News image

மாதிரிப் படம்

Updated On :21 மே 2026, 11:18 pm IST

வேலூா் அருகே பைக் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பணம் ரூ.1 லட்சம் திருடு போனது.

திருவலம் அருகே சிவனாந்தா காலனி அம்மன் கோவில் தெருவை சோ்ந்தவா் தனியாா் நிறுவன ஊழியா் சேகா் (61). இவா் சம்பவத்தன்று பிற்பகல் திருவலம் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளைக்கு பணம் எடுக்கச் சென்றாா். அவா் வங்கியில் இருந்து ரூ.1 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு பைக் பெட்டியில் வைத்தாா். பைக்கில் பொன்னை தொகுதியில் உள்ள ஒரு இனிப்பு கடைக்கு சென்று இனிப்பு வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றாா். வீட்டிற்கு சென்று பைக் பெட்டியை திறந்து பாா்த்தபோது, பணம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து அவா் திருவலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

மேலும், அவா் சென்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனா்.