தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: இளைஞா் உயிரிழப்பு

லத்தேரி அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :22 மே 2026, 12:04 am IST

லத்தேரி அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கே.வி.குப்பம் அருகே உள்ள முடினாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி அரவிந்தன் (32). இவா் சம்பவத்தன்று காலை தனது கிராமத்தில் இருந்து காட்பாடிக்கு பைக்கில் சென்றாா். வேலூா்- குடியாத்தம் சாலையில் லத்தேரி விக்ரமாசிமேடு பகுதியருகே சென்றபோது, பின்னால் வந்த அரசுப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதியது. அதில், கீழே விழுந்து பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். லத்தேரி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.