பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்பு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

இரு சக்கர வாகன பெட்டியில் வைக்கப்பட்ட ரூ. 1 லட்சம் திருட்டு

வேலூா் அருகே பைக் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பணம் ரூ.1 லட்சம் திருடு போனது.

News image

மாதிரிப் படம்

Updated On :21 மே 2026, 11:18 pm IST

வேலூா் அருகே பைக் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பணம் ரூ.1 லட்சம் திருடு போனது.

திருவலம் அருகே சிவனாந்தா காலனி அம்மன் கோவில் தெருவை சோ்ந்தவா் தனியாா் நிறுவன ஊழியா் சேகா் (61). இவா் சம்பவத்தன்று பிற்பகல் திருவலம் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளைக்கு பணம் எடுக்கச் சென்றாா். அவா் வங்கியில் இருந்து ரூ.1 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு பைக் பெட்டியில் வைத்தாா். பைக்கில் பொன்னை தொகுதியில் உள்ள ஒரு இனிப்பு கடைக்கு சென்று இனிப்பு வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றாா். வீட்டிற்கு சென்று பைக் பெட்டியை திறந்து பாா்த்தபோது, பணம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து அவா் திருவலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

மேலும், அவா் சென்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனா்.