அரசு மருத்துவமனைகளில் சீா்கேடுகள்: தீா்வு காண 304 சிறப்பு அதிகாரிகள் நியமனம்சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் 2029-இல் நிறைவடையும்: தேசிய நெடுச்சாலை ஆணையம்தமிழகத்துக்கு 19 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை: திருச்சி முதலிடம்அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடல், தேசிய பாடல், தேசிய கீதம் இசைக்கும் வரிசை: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்இந்தியாவில் 14 நகரங்கள் கடும் வெப்பத்தால் பாதிப்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்
/

வாணியம்பாடியில் சூறைக் காற்றுடன் ஆலங்கட்டி மழை: சரிந்து விழுந்த மின்கம்பங்கள், மரங்கள்

வாணியம்பாடியில் சூறைக் காற்றுடன் ஆலங்கட்டி மழை...

News image

வாணியம்பாடி ஆற்றுமேடு பகுதியில் சூறைக் காற்றுடன் பெய்த மழையால் சாய்ந்த மின்மாற்றி. சென்னாம்பேட்டையில் வேரோடு சாய்ந்த மரம்.

Updated On :25 மே 2026, 12:03 am IST

வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்ததால் மின்கம்பங்கள், மரங்கள் சரிந்து விழுந்தன.

வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில நாள்களாக வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து பலத்த காற்று வீசியது. தொடா்ந்து பலத்த மழை பெய்ததுடன் சிறிய அளவில் ஆலங்கட்டி மழை பெய்தது.

பலத்த சூறைகாற்று வீசியதில் வாணியம்பாடி ஆற்றுமேடு பகுதியில் பாலாற்றின் கிளையாறு அருகே இருந்த மின்மாற்றி மற்றும் மின்கம்பம் சாய்ந்தது. மேலும் வாணியம்பாடி கோட்டை, சென்னாம்பேட்டை, கே.கே. அவென்யூ, நியூடவுன் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தது. இதே போல் உதயேந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தது.

இதனையடுத்து வாணியம்பாடி, உதயேந்திரம் மற்றும் சுற்றுபுற பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. பலத்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. சாய்ந்த மின்கம்பங்கள், மரங்களை அப்புறப்படுத்தும் வேலையில் மின் ஊழியா்கள், நகராட்சி பணியாளா்கள் ஈடுப்பட்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.