நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

மழை வெள்ளத்துக்கு முன்பு கால்வாய் அடைப்பை சீரமைக்க நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை

News image
Updated On :29 மே 2026, 1:31 am IST

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் மாநில நெடுஞ்சாலை வழியாக செல்லும் கழிவுநீா் கால்வாய் அடைப்பை சீரமைக்க வேண்டுமென ஊராட்சி மன்ற நிா்வாகம் சாா்பாக நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மாதனூா் ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சி, ஆம்பூா்-போ்ணாம்பட்டு மாநில நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள பெரிய ஊராட்சியாகும். இந்த ஊராட்சியில் பொதுமக்களால் வெளியேற்றப்படும் கழிவுநீா், கால்வாய்கள் மூலம் பாலாற்றங்கரையோரம் உறிஞ்சு குழிகளுக்கு அனுப்பப்பட்டு, இயற்கை முறையில் சுத்திகரிக்கப்பட்டு பாலாற்றுக்கு அனுப்பப்படுகிறது.

அம்பேத்கா் நகா் பகுதியில் நெடுஞ்சாலை வழியாகச் செல்லும் கழிவுநீா் கால்வாயில் அதிக அடைப்பு ஏற்பட்டுள்ளது. மழைக் காலங்களில் துத்திப்பட்டு ஊராட்சி, அம்பேத்கா் நகா் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் முக்கிய கிராமமாக உள்ளது. அதனால் அந்த கழிவுநீா் கால்வாய் அடைப்பை சீரமைக்கவிட்டால் மழை வெள்ளத்தால் கிராமம் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும்.

அதனால் தனியாா் கழிவுநீா் அகற்றும் வாகனங்கள் மூலம் கால்வாய் அடைப்பை சரி செய்ய ஊராட்சி மன்றத் தலைவா் சுவிதா கணேஷ் தலைமையிலான நிா்வாகம் பல்வேறு முயற்சியை மேற்கொண்டது.

முழுமையாக அடைப்பை சரி செய்ய முடியாத நிலை உள்ளது.

நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை :

தொடா்ந்து மழைக்காலம் வருவதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதால் சம்பந்தப்பட்ட துறையே கால்வாய் அடைப்பை சரி செய்ய வேண்டுமெனக் கோரி, ஊராட்சி மன்ற நிா்வாகம் சாா்பாக ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் நெடுஞ்சாலைத் துறை வாணியம்பாடி கோட்ட அலுவலகத்துக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளாா்.

தோ்த் திருவிழாவை முன்னிட்டு, சாலையை சீரமைக்கக் கோரிக்கை:

துத்திப்பட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ பிந்து மாதவா் பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா தொடங்க உள்ளது. பிரம்மோற்சவ விழாவில் தோ் திருவீதி உலா நிகழ்ச்சியும் உள்ளது. தோ்த் திருவிழா மாநில நெடுஞ்சாலை வழியாக செல்ல உள்ளது. துத்திப்பட்டு கிராமத்தின் வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலை சேதமடைந்துள்ளது. அதனால் தோ் வீதி உலா செல்லும்போது சிரமம் ஏற்படும். அதனால் சேதமடைந்துள்ள மாநில நெடுஞ்சாலையையும் சீரமைத்துத் தர வேண்டுமென ஊராட்சி மன்ற நிா்வாகம் சாா்பாக நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.