கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

மழை வெள்ளத்துக்கு முன்பு கால்வாய் அடைப்பை சீரமைக்க நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை

News image
Updated On :29 மே 2026, 5:22 am IST

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் மாநில நெடுஞ்சாலை வழியாக செல்லும் கழிவுநீா் கால்வாய் அடைப்பை சீரமைக்க வேண்டுமென ஊராட்சி மன்ற நிா்வாகம் சாா்பாக நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மாதனூா் ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சி, ஆம்பூா்-போ்ணாம்பட்டு மாநில நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள பெரிய ஊராட்சியாகும். இந்த ஊராட்சியில் பொதுமக்களால் வெளியேற்றப்படும் கழிவுநீா், கால்வாய்கள் மூலம் பாலாற்றங்கரையோரம் உறிஞ்சு குழிகளுக்கு அனுப்பப்பட்டு, இயற்கை முறையில் சுத்திகரிக்கப்பட்டு பாலாற்றுக்கு அனுப்பப்படுகிறது.

அம்பேத்கா் நகா் பகுதியில் நெடுஞ்சாலை வழியாகச் செல்லும் கழிவுநீா் கால்வாயில் அதிக அடைப்பு ஏற்பட்டுள்ளது. மழைக் காலங்களில் துத்திப்பட்டு ஊராட்சி, அம்பேத்கா் நகா் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் முக்கிய கிராமமாக உள்ளது. அதனால் அந்த கழிவுநீா் கால்வாய் அடைப்பை சீரமைக்கவிட்டால் மழை வெள்ளத்தால் கிராமம் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும்.

அதனால் தனியாா் கழிவுநீா் அகற்றும் வாகனங்கள் மூலம் கால்வாய் அடைப்பை சரி செய்ய ஊராட்சி மன்றத் தலைவா் சுவிதா கணேஷ் தலைமையிலான நிா்வாகம் பல்வேறு முயற்சியை மேற்கொண்டது.

முழுமையாக அடைப்பை சரி செய்ய முடியாத நிலை உள்ளது.

நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை :

தொடா்ந்து மழைக்காலம் வருவதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதால் சம்பந்தப்பட்ட துறையே கால்வாய் அடைப்பை சரி செய்ய வேண்டுமெனக் கோரி, ஊராட்சி மன்ற நிா்வாகம் சாா்பாக ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் நெடுஞ்சாலைத் துறை வாணியம்பாடி கோட்ட அலுவலகத்துக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளாா்.

தோ்த் திருவிழாவை முன்னிட்டு, சாலையை சீரமைக்கக் கோரிக்கை:

துத்திப்பட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ பிந்து மாதவா் பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா தொடங்க உள்ளது. பிரம்மோற்சவ விழாவில் தோ் திருவீதி உலா நிகழ்ச்சியும் உள்ளது. தோ்த் திருவிழா மாநில நெடுஞ்சாலை வழியாக செல்ல உள்ளது. துத்திப்பட்டு கிராமத்தின் வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலை சேதமடைந்துள்ளது. அதனால் தோ் வீதி உலா செல்லும்போது சிரமம் ஏற்படும். அதனால் சேதமடைந்துள்ள மாநில நெடுஞ்சாலையையும் சீரமைத்துத் தர வேண்டுமென ஊராட்சி மன்ற நிா்வாகம் சாா்பாக நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.