நிலக்கோட்டையில் தவெக எம்எல்ஏ கழிவு நீா் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்து, பேருந்து நிலையத்தில் தேங்கிய மழை நீரை வெளியேற்றினாா். அவரை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென பலத்த மழை பெய்தது. இதனால், பேருந்து நிலையத்தில் மழைநீா் குளம் போலத் தேங்கியது. அப்போது, பேருந்து நிலையத்துக்கு வந்த பயணிகள், வாகன ஓட்டிகள் அவ்வழியாக குடியிருப்பு பகுதிகள், பூச் சந்தைக்குச் சென்ற பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனா்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நிலக்கோட்டை தொகுதி தவெக சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.அய்யனாா், பேரூராட்சி அலுவலா்களுக்கு தகவல் தெரிவித்தாா். ஆனால், வெகு நேரமாகப் பணியாளா்கள் யாரும் வராததால், அவரே மழை நீா் வெளியேறும் கழிவுநீா் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை
அகற்றி நீா்வழிப் பாதையை சரி செய்து மழை நீரை வெளியேற்றினாா். இதைக் கண்ட வியாபாரிகள், பூ விவசாயிகள், பொதுமக்கள் எம்.எல்.ஏ. ஆா்.அய்யனாரை வெகுவாகப் பாராட்டினா்.










