‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

ரயில் மோதி இருவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :29 மே 2026, 1:30 am IST

வாணியம்பாடி மற்றும் ஆம்பூா் அருகே ரயில் மோதி பெண் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

வாணியம்பாடி-விண்ணமங்கலம் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞா் ஒருவா் இறந்து கிடப்பதாக ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் இறந்தவரின் உடமைகளை சோதனை செய்ததில் ஜாா்க்கண்ட் மாநிலம் ராஞ்சி ரயில் நிலையத்தில் இருந்து கோயமுத்தூா் வரை செல்லும்போது படிக்கட்டில் தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது

அதேபோல் ஆம்பூா் ரயில் நிலைய யாா்டில் சுமாா் 50 வயது தக்க பெண் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்தாா்.

ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.