திருத்தணி அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து வியாழக்கிழமை இறந்த சம்பவம் கண்டிகை கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
திருத்தணி ஒன்றியம், எஸ்.அக்ரஹாரத்தை அடுத்த டி.என்.ஆர்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (30), இவரது மனைவி சாந்தி 28). இவர்களின் ஒன்றரை வயது மகன் தினேஷ். வியாழக்கிழமை மாலை, வீட்டின் பின்புறம் தினேஷ் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
பின்னர் அவரை காணவில்லையாம். இந்நிலையில், தினேஷை காணாததால் சாந்தி அவரை தேடியுள்ளார்.
அப்போது தினேஷ் தண்ணீர் தொட்டியில் விழுந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையை மீட்டு பீரகுப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர் தினேúஷ் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.