வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஆத்துப்பாக்கம் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம்: வட்டாட்சியரின் காரை முற்றுகையிட்ட கிராம மக்கள்

கும்மிடிப்பூண்டியைஅடுத்த பெரியபாளையம் அருகே சின்ன ஆத்துப்பாக்கம் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ள நீர் வடிய உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புதன்கிழமை

News image
Updated On :9 நவம்பர் 2017, 10:04 pm

DIN

கும்மிடிப்பூண்டியைஅடுத்த பெரியபாளையம் அருகே சின்ன ஆத்துப்பாக்கம் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ள நீர் வடிய உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புதன்கிழமை அவ்வழியே வந்த வட்டாட்சியரின் காரை முற்றுகையிட்டனர்.
இங்குள்ள செல்லியம்மன் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை முறையிட்டனர். ஆனாலும் அதிகாரிகள் வெள்ள நீர் வடிய உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் அவ்வழியே வந்த ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் கிருபா உஷாவின் காரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். 
இதைத் தொடர்ந்து வட்டாட்சியர் அப்பகுதியைப் பார்வையிட்டு அங்கு தேங்கி இருந்த வெள்ள நீரை வெளியேற்ற வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து அதிகாரிகள் கால்வாய்கள் அமைத்து வெள்ள நீர் வடிய உரிய ஏற்பாடு செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.