பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

பண மதிப்பிழப்பு தினம்: மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

உயர் ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு ஓராண்டு முடிந்ததை முன்னிட்டு நவ-8 ஆம் நாளை கருப்பு தினமாக அறிவித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது

News image
Updated On :9 நவம்பர் 2017, 10:04 pm

DIN

உயர் ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு ஓராண்டு முடிந்ததை முன்னிட்டு நவ-8 ஆம் நாளை கருப்பு தினமாக அறிவித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. 
திருவள்ளூர் பஜார் வீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எ.ஜி.சிதம்பரம் தலைமை வகித்தார். இதில் நிர்வாகி சி.பி.மோகன்தாஸ் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கடந்த ஆண்டு இதேநாளில் இரவு 8 மணிக்கு உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்பு செய்யப்பட்டன. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர். அதோடு வங்கி வரிசையில் நின்று பலர் உயிரிழந்தனர். இதை நினைவு கூறும் வகையில் அப்போது உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியிலும் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏகாட்டூர் ஆனந்தன், ஜே.டி.அருள், ஜி.என்.பழனி , வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.