உயர் ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு ஓராண்டு முடிந்ததை முன்னிட்டு நவ-8 ஆம் நாளை கருப்பு தினமாக அறிவித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
திருவள்ளூர் பஜார் வீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எ.ஜி.சிதம்பரம் தலைமை வகித்தார். இதில் நிர்வாகி சி.பி.மோகன்தாஸ் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கடந்த ஆண்டு இதேநாளில் இரவு 8 மணிக்கு உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்பு செய்யப்பட்டன. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர். அதோடு வங்கி வரிசையில் நின்று பலர் உயிரிழந்தனர். இதை நினைவு கூறும் வகையில் அப்போது உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியிலும் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏகாட்டூர் ஆனந்தன், ஜே.டி.அருள், ஜி.என்.பழனி , வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு திரைப்படம் என்ன ஆனது?
பாகிஸ்தானுடன் கடும் சண்டை: ஆப்கானிஸ்தானில் 5 நாள்களில் 42 பேர் பலி!

ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் புதிய எழுச்சி: பழனிவேல் தியாகராஜன்

அரையிறுதிப் போட்டியில் ஃபார்முக்குத் திரும்புவாரா ஜோஸ் பட்லர்?
வீடியோக்கள்

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

