திருவள்ளூர் அருகே, கசுவா கிராமத்தில் செயல்பட்டு வரும் சேவாலயா பாரதியார் மேல்நிலைப்பள்ளியில் மகாவீர் ஜயந்தி விழாவை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சேவாலயா அறக்கட்டளையின் நிர்வாகி முரளிதரன் தலைமை வகித்தார். இதில், தொழிலதிபர் ஸ்ரீபிரதீப் குமார் ஜெயின் கலந்து கொண்டு பேசுகையில், மகாவீர் ஜயந்தி விழா 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் மூலம் மகாவீரரின் கோட்பாடுகளான சத்தியம், அகிம்சை, திருடாமை போன்ற கொள்கைகள் மற்றும் நல்ல கருத்துகள் ஒவ்வொரு மாணவ, மாணவியரிடமும் சென்று சேர வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் எஸ்.பி.எம்.டி.ஜெம் அறக்கட்டளையின் தலைவர் பரத்குமார் ஜெயின், நிர்வாக இயக்குநர் ஸ்ரீராஜேந்திர பிரசாத் ஜெயின் ஆகியோர் பேசினர். இதைத் தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இதில் ஓய்வு பெற்ற உதவி காவல் ஆணையர் ராஜேந்திரன், எஸ்.எஸ்.ஜெயின் சங்கத்தின் செயலாளர் விமல்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சேவாலயா அறக்கட்டளை நிர்வாகத்தினர் மற்றும் பாரதியார் மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியைகள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் பொதுக் கலந்தாய்வு! மாணவர்கள் கவனிக்க..

மாரிதாஸ் கைது: முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்






