மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கோயில் பாதையில் ஆக்கிரமிப்புகள்:  ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார்

திருவள்ளூர் அருகே, கோயிலுக்குச் செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆட்சியரிடம் பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனர்.  

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 7:43 pm

DIN

திருவள்ளூர் அருகே, கோயிலுக்குச் செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆட்சியரிடம் பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனர்.  
புட்லூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ரயில் மூலமும், பேருந்து உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் மூலமும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்ய வருகின்றனர். 
இதனால், கோயிலுக்குச் செல்லும் பாதை எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும். மேலும், அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்குச் செல்வோரும் இதே பாதையை  பயன்படுத்தி வருகின்றனர். 
இந்நிலையில், கோயிலுக்குச் செல்லும் பாதையில் இடையூறாக இருபுறமும் பலர் ஆக்கிரமிப்புச் செய்து கடைகளை நடத்தி வருகின்றனர். 
இதனால், கோயிலுக்குச் செல்லும் பக்தர்களும், தொழிற்சாலைக்குச் செல்லும் தொழிலாளர்களும் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.  
இதனால், இச்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளித்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.