பொன்னேரி அருகே, மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணை தாக்கி, அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பொன்னேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிங்கிலிமேடு பகுதியில் வசித்து வருபவர் சுஜாதா(35). இவரது மகள் வைஷ்ணவி(4). இவர் வேண்பாக்கம் பகுதியில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வருகிறார். சுஜாதா திங்கள்கிழமை தனது மகளை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது, தடப்பெரும்பாக்கம் அருகே வந்தபோது, இரண்டு இளைஞர்கள், சுஜாதாவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளனர். இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து சுஜாதா மற்றும் அவரது மகள் இருவரும் கீழே விழுந்துள்ளனர்.
அப்போது சுஜாதாவின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகையை இளைஞர்கள் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். கீழே விழுந்ததில் காயமடைந்த சுஜாதாவும், அவரது மகளும் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்த புகாரின் பேரில் பொன்னேரி போலீஸார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இதே போன்று, மீஞ்சூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுப்பேடு பகுதியில் வசித்து வரும் நந்தினியின் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் நகையை பறித்துக் கொண்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் மீஞ்சூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட வேதாந்தாவின் 4 புதிய நிறுவனங்கள்!

இந்தியா - ஸ்லோவாக்கியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம்!

சூப்பர் ஓவரில் இந்தியா ஏ அணியை வீழ்த்தி இலங்கை அசத்தல் வெற்றி!

டாஸ்மாக் கடையை அகற்றுங்கள்: கிராம மக்கள் எதிர்ப்பு | TASMAC |
விடியோக்கள்

டாஸ்மாக் கடையை அகற்றுங்கள்: கிராம மக்கள் எதிர்ப்பு | TASMAC |

ஜூன் 18-ல் கண்டன ஆர்ப்பாட்டம்: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு | Nainar Nagendran |

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK


