பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு

அம்பத்தூர் அருகே, கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த வட மாநில இளைஞர் மீது மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தார். 

News image
Updated On :1 மார்ச் 2018, 9:52 pm

DIN

அம்பத்தூர் அருகே, கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த வட மாநில இளைஞர் மீது மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தார். 
மேற்கு முகப்பேரை அடுத்துள்ள நொளம்பூர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதி 2-இல் கட்டுமானப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. இங்கு, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த செல்லாராம் (19) வேலை பார்த்து வந்தார். 
இந்நிலையில், வியாழக்கிழமை காலை அவர் பணியில் ஈடுபட்டிருந்தபோது, குழாயில் தண்ணீர் வராததால் மின் மோட்டாரை இயக்கியுள்ளார். அப்போது செல்லாராம் மீது மின்சாரம் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்ட மற்ற பணியாளர்கள் மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு, செல்லாராமை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துபோனதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து நொளம்பூர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி விசாரணை நடத்தி வருகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.