அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா

மாதவரத்தில் பல்வேறு பகுதிகளில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பும், அன்னதானமும் வழங்கி திமுகவினர் கொண்டாடினர்.

News image
Updated On :1 மார்ச் 2018, 9:54 pm

DIN

மாதவரத்தில் பல்வேறு பகுதிகளில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பும், அன்னதானமும் வழங்கி திமுகவினர் கொண்டாடினர்.
மாதவரம் எம்எல்ஏ எஸ்.சுதர்சனம் தலைமையில் நடைபெற்ற மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில், ஏழை எளிய மக்களுக்கு இனிப்பு வழங்குதல், ஆதரவற்றோர் இல்லங்களில் புதிய ஆடைகள், அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை (மார்ச் 1) காலை முதல் நடைபெற்றன. 
விநாயகபுரத்தில்...
இதேபோல், மாதவரத்தை அடுத்த விநாயகபுரத்தில் உள்ள தனியார் ஆதரவற்றோர் இல்லத்தில் ஆதரவற்றோருக்கு புத்தாடைகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பகுதிச் செயலாளர் துக்காராம், மாவட்ட துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், வட்டச் செயலாளர் நந்தகோபால், குட்டிமோகன், தசரதன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வடபெரும்பாக்கத்தில்... 
செங்குன்றத்தை அடுத்த வடபெரும்பாக்கத்தில் பொதுக்குழு உறுப்பினர் புழல் நாராயணன் தலைமையில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகள் பிரம்மாண்ட கேக்கை வெட்டி அனைவருக்கும் வழங்கி கொண்டாடினர். மேலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதில், திமுக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் கவிதா நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கிராண்ட்லைன் ஊராட்சியில்...
கிராண்ட்லைன் ஊராட்சியில் உள்ள அரசுப் பள்ளியில் முன்னாள் தலைவர் ஏழுமலை தலைமையில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி கொண்டாடினர்.
மேலும் அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் , அன்னதானம் வழங்கினர். இதில் பொதுக் குழு உறுப்பினர்கள் ஜெ.ஜெய்மதன், துரை.செல்வராஜ், வார்டு செயலாளர்கள் நேதாஜி, தேவன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.