6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

5 இடங்களில் இன்று 'அம்மா' திட்ட முகாம்

திருவள்ளூர் மாவட்டத்தில் 5 இடங்களில் 'அம்மா' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (மார்ச் 2) நடைபெற இருப்பதாக ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்தார். 

News image
Updated On :1 மார்ச் 2018, 9:52 pm

DIN

திருவள்ளூர் மாவட்டத்தில் 5 இடங்களில் 'அம்மா' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (மார்ச் 2) நடைபெற இருப்பதாக ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்தார். 
இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் நோக்கத்தில் வருவாய்த் திட்ட ம் என்ற 'அம்மா' திட்ட முகாம் வாரந்தோறும் குறிப்பிட்ட கிராமங்களைத் தேர்வு செய்து நடத்தப்பட்டு வருகிறது. 
அதன் அடிப்படையில் இவ்வாரத்திற்கான முகாம் ஒவ்வொரு வட்டத்திலும் உள்ள கிராமங்களில் வெள்ளிக்கிழமை (மார்ச் 2) காலை 10 முதல் மாலை 5 மணி வரையில் நடைபெற இருக்கிறது. 
இந்த முகாம், குறிப்பிட்ட கிராமங்களில் அந்தந்த பகுதி வட்டாட்சியர் தலைமையில் நடைபெற இருக்கிறது. இதில், முதியோர் ஓய்வூதியம் உள்பட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு இறப்புச் சான்றிதழ், சாதி சான்றிதழ், குடும்ப அட்டை, குடிநீர் பிரச்னைகள், நிலம் சம்பந்தமான பிரச்னைகள் போன்றவை குறித்து பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தகுதியானோருக்கு நலத்திட்ட உதவிகள் அன்றைய தினமே வழங்கப்படும். 
முகாம் நடைபெறும் இடங்கள்: பொன்னேரியில் அனுப்பம்பட்டு-2 கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகிலும், திருத்தணி-சிவாடா கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், ஊத்துக்கோட்டை-திம்ம பூபாலபுரம் கிராம நிர்வாக அலுவலகம் அருகிலும், கும்மிடிப்பூண்டி-வி.ஆத்துப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலகம் அருகிலும், திருவள்ளுர்-அல்லிக்குழி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகிலும் நடைபெற இருக்கிறது. இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்து பயனடையலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.