ராணுவ அலுவலர் பதவிக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ள முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு நவம்பர் 7-ஆம் தேதி முதல் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட இருப்பதாக ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் ராணுவத்தில் அலுவலர்களாக நியமனம் பெறுவதை ஊக்குவிக்கும் வகையில், யுபிஎஸ்சி சார்பில் நவம்பர் 18-ஆம் தேதி தேர்வு நடத்தப்படவுள்ளது. இத்தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு வரும் 7-ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து 16-ஆம் தேதி வரையில் முன்தேர்வுக்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இப்பயிற்சி சென்னை-3, எண்: 22, ராஜா முத்தையா சாலையில் உள்ள முன்னாள் படைவீரர் நல இயக்க அலுவலகத்தில் அளிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக, திருவள்ளூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டோ அல்லது நேரில் அணுகியோ தேவையான கூடுதல் விவரங்களை பெற்றுப் பயனடையலாம் அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒருநாள் போட்டிகளில் 3000 ரன்களைக் கடந்த ஷ்ரேயாஸ் ஐயர்!
தனுஷ் - 55 படத்தின் தலைப்பு அறிவிப்பு!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை! செய்திகள் நேரலை
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech


