ராணுவ அலுவலர் பதவிக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ள முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு நவம்பர் 7-ஆம் தேதி முதல் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட இருப்பதாக ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் ராணுவத்தில் அலுவலர்களாக நியமனம் பெறுவதை ஊக்குவிக்கும் வகையில், யுபிஎஸ்சி சார்பில் நவம்பர் 18-ஆம் தேதி தேர்வு நடத்தப்படவுள்ளது. இத்தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு வரும் 7-ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து 16-ஆம் தேதி வரையில் முன்தேர்வுக்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இப்பயிற்சி சென்னை-3, எண்: 22, ராஜா முத்தையா சாலையில் உள்ள முன்னாள் படைவீரர் நல இயக்க அலுவலகத்தில் அளிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக, திருவள்ளூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டோ அல்லது நேரில் அணுகியோ தேவையான கூடுதல் விவரங்களை பெற்றுப் பயனடையலாம் அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கே. பாக்யராஜ் மறைவு பேரிழப்பு; இறுதிச் சடங்குக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய்

தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைக்க வேண்டும்! ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்!

ஆண்களின் உலகம்: பாக்யராஜின் மௌன கீதங்கள்... சென்சாரில் 4 பெண்கள்!





