தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் குறித்து அவதூறாகப் பேசி அதை கட்செவி அஞ்சலில் (வாட்ஸ் ஆப்) விமர்சித்து பதிவு செய்து அனுப்பியவரை மப்பேடு போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் திங்கள்கிழமை கூறியதாவது:
கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியப் பொறுப்பாளராக இருந்து வருபவர் ரமேஷ். அவருக்கு ஒரு நபர் கட்செவியில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் குறித்து அவதூறாகப் பேசி அப்பதிவை அனுப்பி வைத்தார். இது தொடர்பாக உடனே ரமேஷ் மப்பேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் மப்பேடு போலீஸார் விசாரணை நடத்தினர்.
அதோடு, இணையதளக் குற்றத்தடுப்பு (சைபர் கிரைம்) போலீஸாரின் உதவியுடன் அவதூறு பரப்பியவர் யார் என்று ஆய்வு செய்தனர். அப்போது, கொருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற ரமேஷ் என்பவரே இந்தச்செயலில் ஈடுபட்டார் என்பது தெரிய வந்தது. அவரை மப்பேடு போலீஸார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (19.05.2026) - கும்பம்
இன்றைய ராசி பலன் (19.05.2026) - சிம்மம்
இன்றைய ராசி பலன் (19.05.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (19.05.2026) - ரிஷபம்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
