திருவள்ளூர் அருகே தனியார் நிறுவனத்தில் உற்பத்தி செய்து வைக்கப்பட்டிருந்த 80 செல்லிடப்பேசிகள், மின்கலன் உள்ளிட்ட ரூ. 2.14 லட்சம் மதிப்பிலான பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
திருவள்ளூர் அருகே குத்தம்பாக்கம் பகுதியில் செல்லிடப்
பேசிகள் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தில் குத்தம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி (21) உற்பத்திப் பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 20-ஆம் தேதி வரையில் தயார் செய்யப்பட்ட 80 செல்லிடப்பேசிகள், 65 மின்கலன், 13 டிஸ்பிளே ஆகியவற்றை சிப்பமிட்டு, பாதுகாப்பாக வைத்திருந்தனராம். ஆனால், வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை நிறுவனத்துக்கு வந்தபோது, அங்கு தயாராக வைத்திருந்த செல்லிடப்பேசிகள் அடங்கிய பார்சல் காணாமல் போயிருந்ததும், அவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து வெள்ளவேடு காவல் நிலையத்தில் பாலாஜி அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து, செல்லிடப்பேசிகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் காங்கிரஸ் ஒற்றை இலக்க வெற்றியைத் தாண்டாது-அமித் ஷா

பிரதமரை விமா்சித்த விவகாரம்: மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ்

தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

தில்லி விமான சேவையை மீண்டும் தொடங்கியது ஏா் சீனா
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

