சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

வழிப்பறி வழக்கில் 2 பேர் கைது

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற வழிப்பறி சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து சிறையில்

Updated On :22 அக்டோபர் 2018, 10:43 pm


கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற வழிப்பறி சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கும்மிடிப்பூண்டி சிறுபுழல்பேட்டையை அடுத்த புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பழைய இரும்பு வியாபாரி சண்முகபாண்டியன்(43). அவர் கடந்த ஏப்ரல் மாதம் தனது வீட்டிற்கு சிப்காட் தொழிற்பேட்டை வழியே பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து பணம் மற்றும் விலை உயர்ந்த பொருள்களை திருடிக் கொண்டு தப்பியோடியது. இது தொடர்பாக கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன் பேரில் ஏற்கெனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த இருவரை போலீஸார் தேடி வந்தனர். 
இந்நிலையில், இந்த வழிப்பறியில் தொடர்புடைய மணி(28), எண்ணூரைச் சேர்ந்த லாவா குமார்(29) ஆகிய இருவரையும், கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.