திருவள்ளூர் அருகே முன்விரோதம் காரணமாக 2 பேரை கத்தியால் வெட்டியது தொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருவள்ளூர் அருகே மேல்நல்லாத்தூர் கிராமத்தில் உள்ள விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த வெங்கடேசனின் மகன் தினேஷ்குமார்(20). இவர் செவ்வாய்க்கிழமை இரவு தனது உறவினர் மகன் ஹரிகிருஷ்ணனுடன் (22) கடை வீதிக்குச் சென்றார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (25) உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து தினேஷ்குமார், ஹரிகிருஷ்ணன் ஆகியோரைத் தாக்கி, கத்தியால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் இருவரும் பலத்த காயம்அடைந்தனர்.
அவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஹரிகிருஷ்ணன் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுதொடர்பாக மணவாளநகர் காவல் நிலையத்தில் தினேஷ்குமார் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து, அதே பகுதியைச் சேர்ந்த முருகன், சஞ்சீவிராமன், மணிபாரதி, பாரத், சிவசங்கரன் ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாலை விபத்தில் தாய், மகன் காயம்: ஆட்டோ ஓட்டுநா் கைது

பைக்குகள் மோதல்: விவசாயி உயிரிழப்பு

படையெடுப்புகள் இருந்தபோதிலும் ஆன்மிக நம்பிக்கை தளரவில்லை: முதல்வா் ரேகா குப்தா

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை: இறுதிச் சுற்றில் 8 சிறுமிகள், 4 பேருக்கு வெண்கலம்
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
