திருவள்ளூர் அருகே முன்விரோதம் காரணமாக 2 பேரை கத்தியால் வெட்டியது தொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருவள்ளூர் அருகே மேல்நல்லாத்தூர் கிராமத்தில் உள்ள விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த வெங்கடேசனின் மகன் தினேஷ்குமார்(20). இவர் செவ்வாய்க்கிழமை இரவு தனது உறவினர் மகன் ஹரிகிருஷ்ணனுடன் (22) கடை வீதிக்குச் சென்றார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (25) உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து தினேஷ்குமார், ஹரிகிருஷ்ணன் ஆகியோரைத் தாக்கி, கத்தியால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் இருவரும் பலத்த காயம்அடைந்தனர்.
அவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஹரிகிருஷ்ணன் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுதொடர்பாக மணவாளநகர் காவல் நிலையத்தில் தினேஷ்குமார் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து, அதே பகுதியைச் சேர்ந்த முருகன், சஞ்சீவிராமன், மணிபாரதி, பாரத், சிவசங்கரன் ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

காவல்கார கருப்பு மேக்கிங் விடியோ!

இந்த வாரம் கலாரசிகன் - 31-05-2026

கூடலழகர் கோயில் தேரோட்டம்! ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
விடியோக்கள்

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்


