செங்குன்றம் அருகே உள்ள அலுமினியம் உருக்கு ஆலையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூரில் தனியார் அலுமினிய உருக்கு ஆலை இயங்கி வருகிறது. இங்கு பழைய அலுமினியப் பொருள்களை வாங்கி வந்து உருக்கி, புதிய அலுமினிய கட்டிகளாக தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆலையால் ஏற்படும் மாசு அருகில் உள்ள குடியிருப்புகளை பாழ்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் அலுமினிய உருக்கு ஆலையை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து பொன்னேரி வட்டாட்சியர் புகழேந்தி உள்ளிட்ட அதிகாரிகள் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பொன்னேரி வட்டாட்சியர் புகழேந்தி, அந்த ஆலையை மூடுமாறு உரிமையாளருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து ஆலை மூடப்பட்டதால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழகத்தில் சாதனை வசூலைச் செய்த கருப்பு!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு இருக்கிறதா? -கனிமொழி கேள்வி

ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் இணைந்தனர்!
சர்தார் - 2 சிறப்பு போஸ்டர்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


