தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

அலுமினிய உருக்கு ஆலை முற்றுகை

செங்குன்றம் அருகே உள்ள அலுமினியம் உருக்கு ஆலையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். 

Updated On :26 பிப்ரவரி 2019, 4:06 am IST


செங்குன்றம் அருகே உள்ள அலுமினியம் உருக்கு ஆலையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். 
 செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூரில் தனியார் அலுமினிய உருக்கு ஆலை இயங்கி வருகிறது. இங்கு பழைய அலுமினியப் பொருள்களை வாங்கி வந்து உருக்கி, புதிய அலுமினிய கட்டிகளாக தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆலையால் ஏற்படும் மாசு அருகில் உள்ள குடியிருப்புகளை பாழ்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.  
இந்நிலையில், இப்பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர்  அலுமினிய உருக்கு ஆலையை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து பொன்னேரி வட்டாட்சியர் புகழேந்தி உள்ளிட்ட அதிகாரிகள் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
பொன்னேரி வட்டாட்சியர் புகழேந்தி, அந்த ஆலையை மூடுமாறு உரிமையாளருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து ஆலை மூடப்பட்டதால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.