எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

அலுமினிய உருக்கு ஆலை முற்றுகை

செங்குன்றம் அருகே உள்ள அலுமினியம் உருக்கு ஆலையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். 

Updated On :26 பிப்ரவரி 2019, 4:06 am IST


செங்குன்றம் அருகே உள்ள அலுமினியம் உருக்கு ஆலையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். 
 செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூரில் தனியார் அலுமினிய உருக்கு ஆலை இயங்கி வருகிறது. இங்கு பழைய அலுமினியப் பொருள்களை வாங்கி வந்து உருக்கி, புதிய அலுமினிய கட்டிகளாக தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆலையால் ஏற்படும் மாசு அருகில் உள்ள குடியிருப்புகளை பாழ்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.  
இந்நிலையில், இப்பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர்  அலுமினிய உருக்கு ஆலையை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து பொன்னேரி வட்டாட்சியர் புகழேந்தி உள்ளிட்ட அதிகாரிகள் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
பொன்னேரி வட்டாட்சியர் புகழேந்தி, அந்த ஆலையை மூடுமாறு உரிமையாளருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து ஆலை மூடப்பட்டதால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.