கரூருக்கு முதல்வா் ஜோசப் விஜய் இன்று வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஉலகிலேயே அதிக மீன்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2-ஆவது இடம்: குடியரசு துணைத் தலைவா் பெருமிதம்பயங்கரவாத எதிா்ப்பு: ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ரஷியா உறுதி தெற்கு ரயில்வேயில் மறுசீரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்கள் விரைவில் திறப்பு
/

தர்மேந்திராவின் பத்ம விபூஷண் விருதை பெற்றுக்கொண்டார் ஹேமமாலினி! கலைத் துறை பட்டியல்!

வயலின் இசைக் கலைஞர் டாக்டர் என். ராஜம் பத்ம விபூஷண் விருதை பெற்றுக்கொண்டார்.

News image

குடியரசுத் தலைவரிடம் பத்ம விருது பெற்றுக்கொண்ட ஹேம மாலினி - பிடிஐ

Updated On :25 மே 2026, 8:16 pm IST

பாலிவுட் நடிகர் தர்மேந்திராவுக்கு அறிவிக்கப்பட்ட பத்ம விபூஷண் விருதை நடிகையும் அவரின் மனைவியுமான ஹேம மாலினி குடியரசுத் தலைவரிடம் இன்று (மே 25) பெற்றுக்கொண்டார்.

2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்றது. இதில் பத்க விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று விருதுகளை வழங்கினார்.

இதன்படி கலைத் துறையில் 300 படங்களுக்கும் மேல் நடித்து பாலிவுட் திரை உலகிற்கு தன்னிகரற்ற சேவையாற்றியதற்காக மறைந்த நடிகர் தர்மேந்திராவுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதை குடியரசுத் தலைவரிடம் அவரின் மனைவி ஹேம மாலினி பெற்றுக்கொண்டார்.

வயலின் இசைக் கலைஞர் டாக்டர் என். ராஜம் பத்ம விபூஷண் விருதை பெற்றுக்கொண்டார்.

பாலிவுட் நடிகர் அரவிந்த் வைத்தியா பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டார்.

பெங்காலி சூப்பர் ஸ்டார் புரோசென்ஜித் சாட்டர்ஜி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டார்.

தபேலா கலைஞர் குமார் போஸ், பிகார் நாட்டுப்புற பாடகர் பாரத் சிங் பாரதி ஆகியோரும் பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.