கும்மிடிப்பூண்டி அருகே அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த பாதிரிவேடு பகுதியைச் சேர்ந்தவர் முரளி (50). இவர், மாதர்பாக்கம் அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கோமளா. பன்பாக்கம் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர்கள் குடும்பத்தினருடன் கவரப்பேட்டையில் வசித்து வந்தார்.
முரளி திங்கள்கிழமை பள்ளிக்கு வரவில்லையாம். இந்நிலையில், மாதர்பாக்கத்தை அடுத்த போந்தவாக்கம் அருகே கிணற்றில் இருந்து முரளியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பாதிரிவேடு போலீஸார் முரளியின் சடலத்தை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருச்செங்கோட்டில் தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி: முதல்வர் இரங்கல், நிதியுதவி அறிவிப்பு

ஐபிஎல் இறுதிப் போட்டி: திருவிழாவாக மாறிய குஜராத்!

அபிஷன் ஜீவிந்த்தின் புதிய பட புரோமோ!

இம்பாக்ட் வீரர் விதி நீக்கப்பட வேண்டும்: சச்சின் டெண்டுல்கர்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


