இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

கிணற்றில் பள்ளித் தலைமை ஆசிரியர் சடலம்

கும்மிடிப்பூண்டி அருகே அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Updated On :26 பிப்ரவரி 2019, 4:05 am IST


கும்மிடிப்பூண்டி அருகே அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த பாதிரிவேடு பகுதியைச் சேர்ந்தவர் முரளி (50). இவர், மாதர்பாக்கம் அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கோமளா. பன்பாக்கம் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர்கள் குடும்பத்தினருடன் கவரப்பேட்டையில் வசித்து வந்தார்.
முரளி திங்கள்கிழமை பள்ளிக்கு வரவில்லையாம். இந்நிலையில், மாதர்பாக்கத்தை அடுத்த போந்தவாக்கம் அருகே கிணற்றில் இருந்து முரளியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பாதிரிவேடு போலீஸார் முரளியின் சடலத்தை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.   மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.