நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் நடைபெற்ற தேர்த்திருவிழாவில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் சி.ஜோசப் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளதுடன் நிதியுதவி அறிவித்துள்ளார்.
திருச்செங்கோட்டில் அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில் வைகாசி விசாக தேர்த்திருவிழாவின்போது, தேரின் சக்கரத்திற்கும் அருகிலிருந்த சுவற்றிற்கும் இடையே எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்டு இளைஞர் ஒருவர் பலியானார், பலத்த காயமடைந்த மற்றொரு இளைஞர் சஷ்டிகன் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
இந்த நிலையில், தேர்த்திருவிழாவில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு, காயமடைந்தவருக்கு முதல்வர் சி.ஜோசப் விஜய் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார்.
முதல்வர் விஜய் தனது இரங்கல் மற்றும் நிதியுதவி அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் இன்று (மே 31) காலை 10.30 மணியளவில் அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில் தேர்த்திருவிழாவின்போது தேரின் சக்கரத்திற்கும் அருகிலிருந்த சுவற்றிற்கும் இடையே எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்ட அந்த பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜா மகன் ஹர்ஷவர்தன் (18) என்பவர் பலத்த காயம் ஏற்பட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர் உயிரிழந்துவிட்டார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதே பகுதியைச் சேர்ந்த கௌரிசங்கர் மகன் சஷ்டிகன்(19). என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.
Summary
Tiruchengode Temple Car accident: CM Vijay announces financial assistance...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அஜித்குமார் தாயார் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல்

சாலை விபத்தில் இளைஞர் பலி!

இன்னும் 3 நாள்களில் திருமணம்... நிச்சயிக்கப்பட்ட இளைஞர், உறவினர்கள் சாலை விபத்தில் பலி!

தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



