இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!

முப்படை தலைமைத் தளபதியானார் தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி!

News image

ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி - @SpokespersonMoD

Updated On :31 மே 2026, 3:34 pm IST

புது தில்லி : இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி ஞாயிற்றுக்கிழமை (மே 31) பொறுப்பேற்றுக் கொண்டார்.

முப்படை தலைமைத் தளபதியாகப் பதவி வகித்த ஜெனரல் அனில் சௌஹான் சனிக்கிழமையுடன் (மே 30) ஓய்வு பெற்றார். இந்த நிலையில், இன்று முப்படை தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி செய்தியாளர்களுடன் பேசியபோது, “நமது பாதுகாப்புப் படைகள் நமது தேச நலன்களைப் பாதுகாப்பதில் செயலாற்றுத் திறனுடன் திகழ்வதாகவும் நமது நாட்டின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க கடமைப்பட்டுள்ளதாகவும்” குறிப்பிட்டார்.

மேலும், அவர், “பாதுகாப்பு படைகள் அர்ப்பணிப்புடனும் துணிச்சலுடனும் மாண்புடனும் நாட்டுக்கு சேவையாற்றும் என்று இந்தியக் குடிமக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்” என்றார்.

கடந்தாண்டில் ஜூலையுடன் ராணுவ துணை தலைமைத் தளபதியாக இருந்து பணி ஓய்வு பெற்ற ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய ராணுவத்தில் பல உயர் பொறுப்புகளை வகித்து வந்ததுடன், சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பல்வேறு முக்கியப் படைப்பிரிவுகளை வழிநடத்தி நீண்ட ராணுவ அனுபவம் கொண்டவர் என்பதும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் (என்.எஸ்.சி.எஸ்.) ராணுவ ஆலோசகராக இருந்த நிலையில், இந்தியாவின் 3-ஆவது முப்படை தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முப்படைத் தலைமைத் தளபதி பதவிக்குத் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

Summary

Gen Subramani takes charge as India's new Chief of Defence Staff

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.