புது தில்லி : இந்திய கடற்படை தலைமைத் தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் ஞாயிற்றுக்கிழமை (மே 31) பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடற்படை தலைமைத் தளபதியாக இருந்த தினேஷ் கே.திரிபாதி இன்றுடன் பணி ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து இந்திய முப்படைகளின் முக்கிய பதவிகளுள் ஒன்றான கடற்படை தலைமைத் தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மேற்கு மண்டல கடற்படை பிரிவு தலைமைத் தளபதியாகப் பணியாற்றி வந்த கிருஷ்ணா சுவாமிநாதன் இந்திய கடற்படையின் 27-ஆவது தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது பதவிக்காலம் 2028 டிசம்பர் 31 ஆம் தேதி வரை தொடரும்.
அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுடன் பேசிய அவர், “இந்திய கடற்படை தேச நலன்களைப் பாதுகாக்க விழிப்புடன் நிற்கிறது. மேலும், சவாலானதாகவும் கணிக்க முடியாததாகவும் நிலைத்தன்மையற்றதாகவும் நீடிக்கும் பிராந்திய பாதுகாப்பு சூழலில் செம்மையாக பணியில் ஈடுபட்டுள்ளது.
எனது உச்சபட்ச குறிக்கோளாக இந்திய ராணுவத்தை உயர்நிலையில் தயார் நிலையிலும் திறம்படவும் நிலைத்திருக்கச் செய்வதே. அதன்மூலம், தேசப் பாதுகாப்பையும் பொருளாதார நலன்களையும் பாதுகாக்கவும் அதனால் முடியும்” என்றார்.
Summary
Admiral Krishna Swaminathan takes charge as new Navy chief
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

சீனா - பாகிஸ்தான் அச்சுறுத்தல்: கடற்படைத் திறன்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன -தலைமைத் தளபதி திரிபாதி
சௌமியா சுவாமிநாதனுக்கு லண்டன் ராயல் சொசைட்டி கௌரவம்!

இந்திய கடற்படையின் புதிய தளபதியாக கிருஷ்ணா சுவாமிநாதன் நியமனம்!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK




