11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

கல்லூரியில் தொழில்நுட்ப பயிற்சி பட்டறை

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் டிஜேஎஸ் பொறியியல் கல்லூரியின் இயந்திர பொறியியல் துறை சார்பில் தொழில்நுட்பப் பயிற்சி பட்டறை புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :24 ஜனவரி 2019, 12:34 am IST

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் டிஜேஎஸ் பொறியியல் கல்லூரியின் இயந்திர பொறியியல் துறை சார்பில் தொழில்நுட்பப் பயிற்சி பட்டறை புதன்கிழமை நடைபெற்றது.
சென்னையைச் சேர்ந்த விஸ்மெக் நிறுவனத்துடன் இணைந்து பொறியியல் மாணவர்களுக்கான "மாஸ்டர் கேம்' என்ற நவீன இயந்திர வடிவமைப்பு தொழில்நுட்பம் குறித்த பயிற்சி பட்டறை கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டது.
பயிற்சி பட்டறையைத் தொடங்கி வைத்த டிஜேஎஸ் கல்விக் குழுமத் தலைவர் டி.ஜே.கோவிந்தராஜன் பேசியது:
நவீன தொழில்நுட்பங்களை உடனுக்குடன் மாணவர்கள் கற்றறிவதன் மூலம் அவர்களின் வேலைவாய்ப்புத் திறன் அதிகரிப்பதோடு, அவர்களின் சிந்தனைத் திறனை தூண்டுகிறது, இக்கால மாணவர்களின் முன்னேற்றத்துக்கு கவனச் சிதறலே தடையாக உள்ளது 
என்றார் அவர்.
நிகழ்வில் விஸ்மெக் நிறுவனத்தின் பயன்பாட்டு பொறியாளர் விக்னேஷ் பிரசாந்த்,  தொழில் முன்னேற்றப் பொறியாளர்  செல்வமூர்த்தி, கல்லூரி முதல்வர் பழனி, இயந்திர பொறியியல் துறைத் தலைவர் ஜெயவீரன், பேராசிரியர் ஆர். ரவிக்குமார், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.