ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

ஆரம்ப சுகாதார நிலையத்தை மாற்ற எதிர்ப்பு:  பொதுமக்கள் சாலை மறியல்

திருவாலங்காடு அருகே இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Updated On :23 ஜனவரி 2019, 6:16 am IST

திருவாலங்காடு அருகே இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 திருவாலங்காடு ஒன்றிய அலுவலகம் அருகில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதை மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தி, 30 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. இதற்காக, அரசு ரூ. 1.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
 தற்போது இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய இடவசதி இல்லை எனக் கூறி, திருவாலங்காட்டில் இருந்து, 3 கி.மீ. தொலைவில் உள்ள கூடல்வாடி கிராமம் அருகே, 2 ஏக்கர் நிலத்தில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு பொதுப் பணித்துறையினர் முடிவு செய்தனர். தொடர்ந்து, கட்டடம் கட்டுவதற்கு மண் பரிசோதனை செய்து, தயார் நிலையில் இருந்தனர். இதற்கான முதல் கட்ட நிதியாக, ரூ. 63 லட்சம் அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து தகவல் அறிந்த, திருவாலங்காடு கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திருவாலங்காடு ஒன்றிய அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறுகையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை இடமாற்றம் செய்யக்கூடாது, அதே இடத்தில் விரிவுபடுத்த வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அதை மீறி, கூடல்வாடியில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் கட்டக்கூடாது என்றார் அவர். 
 தகவல் அறிந்து வந்த திருவாலங்காடு காவல் ஆய்வாளர் ருக்மாங்கதன், வருவாய் ஆய்வாளர் மணிகண்டன், கிராம நிர்வாக அலுவலர் அனந்தநாராயணன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
பின்னர், கோரிக்கையை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக அதிகாரிகள் உறுதி அளித்த பின், பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.