எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம்

திருவள்ளூர் அருகே திமுக சார்பில் நடத்தப்பட்ட ஊராட்சி சபைக் கூட்டத்தில் தெருவிளக்கு வசதி உள்ளிட்ட

Updated On :24 ஜனவரி 2019, 12:34 am IST

திருவள்ளூர் அருகே திமுக சார்பில் நடத்தப்பட்ட ஊராட்சி சபைக் கூட்டத்தில் தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கோரிக்கை மனுக்களை சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரனிடம் அளித்தனர். 
திமுக சார்பில் ஒவ்வொரு கிராமத்திலும் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறியும் வகையில்     ஊராட்சி சபைக் கூட்டம் நடத்த அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு வலியுறுத்தியுள்ளார். இதன் அடிப்படையில் திருவள்ளூர் தெற்கு மாவட்டம் திமுக சார்பில் ஒவ்வொரு கிராமத்திலும் ஊராட்சி சபைக் கூட்டம் நடத்தி வருகின்றனர். 
இந்நிலையில் கடம்பத்தூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் ராமன்கோயில் கிராமத்தில் ஊராட்சி சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு திருவள்ளூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
அப்போது, பொதுமக்கள் இக்கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்க ஆழ்குழாய் கிணறு, கால்வாய் சீரமைப்பு, தெருவிளக்கு வசதி, சிமென்ட் சாலை வசதி செய்து தர வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை அவர் பெற்றுக் கொண்டார். 
இந்த மனுக்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார். 
அதேபோல் கடம்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள பிரியாங்குப்பம், விடையூர், செஞ்சி, சிற்றம்பாக்கம், காவாங்கொளத்தூர் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற ஊராட்சி சபைக்கூட்டங்களிலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 
இதற்கான ஏற்பாடுகளை கடம்பத்தூர் ஒன்றிய செயலர் அரி உள்ளிட்ட அக்கட்சியினர் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.