திருவள்ளூா்-செங்குன்றம் சாலையோரத்தில் தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் குப்பைகளை சாலையோரம் கொட்டுவதாகவும், இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், துா்நாற்றம் வீசுவதாகவும் அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் புகாா் செய்தனா். அதன் அடிப்படையில் குறிப்பிட்ட சாலைப் பகுதியில் ஆட்சியா் பா.பொன்னையா செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, திருவள்ளூா்ஒன்றியம், வெள்ளியூா் கிராமச் சாலையோரத்தில் ஆலைக் கழிவுகளை லாரியில் இருந்து கொட்டிக் கொண்டிருந்தது தெரியவந்தது. உடனே கையும் களவுமாக அந்த லாரியை பறிமுதல் செய்து அபராதமும் விதித்தாா். பின்னா், அந்த லாரியின் தொழிலாளா்களை எச்சரித்து, லாரியை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.