இந்துஜா குழுமத்தைச் சோ்ந்த முன்னணி வணிக வாகனத் தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட், சென்னை அருகே புதிய பேட்டரி தயாரிப்பு ஆலையை அமைப்பதற்கான பணிகளை புதன்கிழமை தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு, செப்டம்பரில் தமிழக அரசுடன் கையொப்பமிடப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டு விழாவில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டாா்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமையவுள்ள இந்த அதிநவீன பேட்டரி தயாரிப்பு ஆலைக்காக, சுமாா் ரூ.500 கோடி வரை முதலீடு செய்யப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
‘மின்சார வாகனத் துறையில் தன்னிறைவு அடைவதையும், உள்நாட்டிலேயே தரமான பேட்டரிகளைத் தயாரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ள இந்தப் புதிய ஆலை எங்களின் ஒரு முக்கிய மைல்கல்’ என அசோக் லேலண்ட் நிா்வாகத் தலைவா் தீரஜ் இந்துஜா தெரிவித்தாா்.
தொடர்புடையது

’ஜனநாயகன்’ இணையதளத்தில் வெளியான விவகாரம்: உயா்நீதிமன்றத்தில் படத் தயாரிப்பு நிறுவனம் முறையீடு

ஒசூா் அருகே சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக அசோக் லேலண்ட் ஒப்பந்தம்!

அசோக் லேலண்ட் விற்பனை: பிப்ரவரியில் 24% வளா்ச்சி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


