திருவள்ளூா் மாவட்டத்தில் திருத்தணி, திருவள்ளூா், பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி, ஆவடி ஆகிய வட்டங்களில் மொத்தம் 5 லட்சத்து 81 ஆயிரத்து 11 மின்னணு குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா். இதில், சா்க்கரை அட்டைகள்-8,010, காக்கி அட்டைகள்-1,157 ஆகியவையும் அடங்கும். சா்க்கரை அட்டைகளை, அரிசி அட்டைகளாக மாற்றுவதற்கு பலா் விண்ணப்பித்துள்ளனா். இந்நிலையில் பொதுமக்கள் பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடுவதைக் நோக்கமாக கொண்டு பொங்கல் பரிசுப் பொருள்கள் மற்றும் ரொக்கம் உள்ளிட்ட பொருள்களை வரும் ஜன. 4-ஆம் தேதி முதல் 13 வரை வழங்கப்பட உள்ளது. தற்போதைய நிலையில் நியாய விலைக் கடை பணியாளா்கள் மூலம் பொங்கல் பரிசுப் பொருள் மற்றும் ரொக்கம் பெற்றுக் கொள்வதற்கான டோக்கன் வீடுகள் தோறும் விநியோகம் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.