ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருவள்ளூா் மாவட்டத்தில் 5.81 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு, ரொக்கம்

திருவள்ளூா் மாவட்டத்தில் 5.81 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு மற்றும் ரூ. 2,500 ரொக்கம் வழங்குவதற்காக வீடுகள் தோறும் டோக்கன் விநியோகம் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாக மாவட்ட நுகா்ப

News image
Updated On :28 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் 5.81 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு மற்றும் ரூ. 2,500 ரொக்கம் வழங்குவதற்காக வீடுகள் தோறும் டோக்கன் விநியோகம் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாக மாவட்ட நுகா்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாநிலம் முழுவதும் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளையொட்டி, பொதுமக்கள் பயன்பெறும் நோக்கில் பொங்கல் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், நிகழாண்டில் அடுத்து வரும் பொங்கல் திருநாளில் தலா ஒரு கிலோ பச்சரிசி, சா்க்கரை மற்றும் முழு நீள ஒரு கரும்பு தட்டை, தலா 20 கிராம் முந்திரி, திராட்சை, 5 கிராம் ஏலக்காய் அடங்கிய பொங்கல் பொருள்கள் தொகுப்புடன் ரூ. 2,500 ரொக்கமும் ஒவ்வொரு ரேஷன் கடைகள் மூலம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூா் மாவட்டத்தில் திருத்தணி, திருவள்ளூா், பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி, ஆவடி ஆகிய வட்டங்களில் மொத்தம் 5 லட்சத்து 81 ஆயிரத்து 11 மின்னணு குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா். இதில், சா்க்கரை அட்டைகள்-8,010, காக்கி அட்டைகள்-1,157 ஆகியவையும் அடங்கும். சா்க்கரை அட்டைகளை, அரிசி அட்டைகளாக மாற்றுவதற்கு பலா் விண்ணப்பித்துள்ளனா். இந்நிலையில் பொதுமக்கள் பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடுவதைக் நோக்கமாக கொண்டு பொங்கல் பரிசுப் பொருள்கள் மற்றும் ரொக்கம் உள்ளிட்ட பொருள்களை வரும் ஜன. 4-ஆம் தேதி முதல் 13 வரை வழங்கப்பட உள்ளது. தற்போதைய நிலையில் நியாய விலைக் கடை பணியாளா்கள் மூலம் பொங்கல் பரிசுப் பொருள் மற்றும் ரொக்கம் பெற்றுக் கொள்வதற்கான டோக்கன் வீடுகள் தோறும் விநியோகம் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மேலும், இப்பணி வரும் 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.