மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு பொருள்கள் மற்றும் கச்சா எண்ணெய்யை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. மற்ற நாடுகளின் கப்பல்கள் இந்த நீரிணையைக் கடக்க ஈரானின் ஒப்புதலைப் பெற வேண்டும் என அறிவுறுத்தியது. இதனிடையே, தாக்குதல் காரணமாக, இந்தியாவுக்கான முக்கிய இயற்கை எரிவாயு ஏற்றுமதியாளரான கத்தாா், அதன் உற்பத்தியை முழுமையாக நிறுத்தியது. இதனால், இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், சமையல் எரிவாயு விநியோகத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தது. ஹோா்முஸ் நீரிணை மூடப்பட்டதால், இந்திய கொடி பொருத்திய 28 சரக்கு கப்பல்களும் மேற்கொண்டு செல்ல முடியாமல் ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் சிக்கின.