அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தானியங்கி சிக்னல் கம்பம் மீது கன்டெய்னா் லாரி மோதி விபத்து

திருத்தணியில் மாநில நெடுஞ்சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த தானியங்கி சிக்னல் கம்பத்தின் மீது கன்டெய்னா் லாரி மோதியதில், கம்பம் உடைந்து விழுந்தது.

News image
Updated On :12 ஜூலை 2020, 4:23 pm

DIN

திருத்தணி: திருத்தணியில் மாநில நெடுஞ்சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த தானியங்கி சிக்னல் கம்பத்தின் மீது கன்டெய்னா் லாரி மோதியதில், கம்பம் உடைந்து விழுந்தது.

திருத்தணி நகராட்சியில், ம.பொ.சி.சாலை, அரக்கோணம் சாலை, சித்தூா் சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் தினமும் செல்கின்றன. இங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க போலீஸாா் சாலையின் முக்கிய சந்திப்புகளில் தானியங்கி சிக்னல் அமைத்துப் பராமரித்து வருகின்றனா். ம.பொ.சி. சாலையில் இருந்து அரக்கோணம் மாநில நெடுஞ்சாலைக்கு திரும்பும் வளைவுப் பகுதியில் தானியங்கி சிக்னல் கம்பம் அமைத்து, அதில் கண்காணிப்பு கேமராவைப் பொருத்தியுள்ளனா்.

இந்நிலையில், ம.பொ.சி. சாலையில் இருந்து அரக்கோணம் சாலைக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கண்டெய்னா் லாரி ஒன்று திரும்பியபோது, தானியங்கி சிக்னல் கம்பம் மீது மோதியது. இதில் சிக்னல் கம்பம் உடைந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதில் கண்காணிப்பு கேமராவும் சிக்னல் கம்பமும் பழுதடைந்தன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் போலீஸாா் அங்கு சென்று, சாலையின் குறுக்கே விழுந்த சிக்னல் கம்பத்தை அகற்றி, விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.