மார்ச் மாதம் 24-ம் தேதி கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக வெளிமாநில தொழிலாளர்கள் தாங்கள் குடியிருந்த இடங்களில் முடங்கி இருந்தனர். அவர்களுக்கு உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை சமூக நல ஆர்வலர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் வழங்கி வந்தனர். பொன்னேரி வட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் தொழில் நிறுவனங்களில், ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம், பிகார், மேற்கு வங்காளம், ஒடிசா, மத்தியப் பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களிலை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்.