பத்திர எழுத்தர் மற்றும் தட்டச்சு அலுவலக சங்கத்தின் சார்பில் ஹோமியோபதி மருந்து விநியோகம்

பத்திர எழுத்தர் மற்றும் தட்டச்சு அலுவலக சங்கத்தின் சார்பில் ஹோமியோபதி மருந்து விநியோகிக்கப்பட்டது.
பத்திர எழுத்தர் மற்றும் தட்டச்சு அலுவலக சங்கத்தின் சார்பில் ஹோமியோபதி மருந்து விநியோகம்
Updated on
1 min read

செங்குன்றம் சார் பதிவகத்தின் பத்திர எழுத்தர் மற்றும் தட்டச்சு அலுவலக உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கரோனா நோய் எதிர்ப்பு ஹோமியோபதி மருந்து வழங்கும் நிகழ்ச்சி சங்கத் தலைவரும் செங்குன்றம் பேரூராட்சி முன்னாள் தலைவருமான ஜி.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. 

செயலாளர் வி.மருதகுமார், பொருளாளர் டி.கலா, துணைத்தலைவர் எம்.மணிவண்ணன், துணைச் செயலாளர் இ.காஞ்சனா ஆகியோர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஹோமியோபதி மருத்துவர் எம்.சௌந்தரி மருந்துகளை எவ்வாறு சாப்பிட வேண்டுமென்றும், அதன் பயன்பாடு குறித்தும் விளக்கி, சார் பதிவாளர் அலுவலக ஊழியர்களுக்கும், தட்டச்சு அலுவலக உரிமையாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பத்திர எழுத்தர்கள், தட்டச்சு கடைகளின் உரிமையாளர்கள், பணியாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com