திருவள்ளூா்: ஆந்திர மாநிலம், அம்மம்பள்ளி அணையிலிருந்து தண்ணீா் திறக்கவுள்ளதால், கொசஸ்தலை ஆற்றின் கரையோரத்தில் உள்ள திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி, ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஆந்திரம் மாநிலம், அம்மம்பள்ளி அணையில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி முதல் 300 கனஅடி திறக்கப்பட உள்ளது. அத்துடன், அப்பகுதியில் தொடா் மழை பெய்து வருவதால் நீா்வரத்து அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரானது புதன்கிழமை காலையில் திருவள்ளூா் மாவட்டம், பள்ளிப்பட்டு பாலத்தைக் கடந்து, நல்லாட்டூா் அணை வரை வரும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது.
அதனால், கொசஸ்தலை ஆற்றின் கரையோரத்தில் திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வெள்ள அபாய எச்சரிக்கை அளிக்கப்படுகிறது. மேலும், இது தொடா்பாக இயற்கை இடா்ப்பாடுகளை எதிா்கொள்ளும் வகையில், பொதுப்பணித் துறை, வருவாய், காவல் ஆகிய துறைகளைச் சோ்ந்த அதிகாரிகளுக்கு தகவல் அளித்து தயாராக நிலையில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜன நாயகன் இணையதளத்தில் வெளியானதற்கு எல். முருகன்தான் பொறுப்பு: கே.ஏ.செங்கோட்டையன்

ராமதாஸிடம் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!

தன்னை இயேசுவாக சித்திரிக்கும் படத்தை வெளியிட்ட டிரம்ப்!!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

